யாழ் கோர விபத்தில் உயிரிழந்த உயர்தர மாணவன் தொடர்பில் வெளியான முழுமையான தகவல்..! வீடியோ இணைப்பு!!
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று (01) காலை 6மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது மாணவன் பயணித்த துவிச்சக்கரவண்டி பல துண்டுகளாக சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்திற்கு காரணமாக பேருந்து சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சாரதியே சற்று சிந்தி……
ஒருநாள் விடு இரு நாள் விடு
தொடர்ந்து மரணம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது ….. என்ன தான் நடக்குது இங்கு
ஒருநாள் விடு இரு நாள் விடு
தொடர்ந்து மரணம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது ….. என்ன தான் நடக்குது இங்கு
இதற்கு கெளரவிப்பு உள்ளதோ
அல்லது பதவி உயர்வோ
ஏய் சாரதியே உனக்கும் ஓர் மகவு இருக்கலாம் பள்ளி பருவத்தில் யாதும் அறியா பிள்ளை
எத்தனை கற்பனையோடு
மிதுவண்டியில் காலை வேளை சென்றானோ ……..
உணவு கூட உண்டாணோ தெரியாது……
ஆனால்
நீ உன் பேரூந்துக்கு இரையாக்கி விட்டாயே…….
பாவம் பாலகன்…….
தாய் தந்தை சகோதரங்கள் பள்ளிக்கு ஆயத்தமானார்களோ or சென்றார்களோ…..
ஐயனே……
கற்பனை ஏராளம்…