புதினங்களின் சங்கமம்

பேஸ்புக் ஊடான கேளிக்கை விருந்தில் அதிக அளவான போதைப் பொருள் பாவித்தாரா? மாநகரசபை உத்தியோகத்தர் உயிரிழந்தார்!

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேளிக்கை விருந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தம்புள்ளை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை கந்தளம பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பேஸ்புக் ஊடாக அங்கத்தவர்களை வரவழைத்து இந்தக் கேளிக்கை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இரவு முதல் மறுநாள் காலை வரை விருந்து நடைபெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை மாநகர சபையில் கடமையாற்றிய சம்பத் விஜயதுங்க என்ற இளைஞர் பாடியும் நடனமாடியும் மகிழ்வித்த நிலையிலேயே திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை இவர் குறித்த கேளிக்கை நிகழ்வில் அதிகளவான போதைப்பொருள் பாவித்து உயிரிழந்ததாக சிங்கள சமூகவலைத்தளம் ஒன்றில் பதிவுகள் வெளியாகியுள்ளது.