நல்லூர் கோயில் முன்பாக விபத்து!! ஒருவர் பலி!! CCTV வீடியோ
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை
உயிரின் பெறுமதி அளப்பரியது.
விபத்து ஏற்பட்ட யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 29-1660 பேரூந்தின்( bus no 60-7137) வழித்தட உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
தலைவர்,
வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை,
வட மாகாணம்.
விபத்து ஏற்பட்ட யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 29-1660 பேரூந்தின்( bus no 60-7137) வழித்தட உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
தலைவர்,
வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை,
வட மாகாணம்.