புதினங்களின் சங்கமம்

மன்னாரில் சிறுமியை கொடூர வல்லுறவாக்கிக் கொன்றது தமிழர் என்ற போர்வையில் அப்துல்லா!! பரபரப்பு தகவல்கள்!! வீடியோ

தலைமன்னார் கிராமம் பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட சுமார் 50 வயதுடைய ஒருவராலேயே சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தனது மனைவியுடன் தலைமன்னார் பகுதியில் வசித்து வந்துள்ளார். கணவன் போதைக்கு அடிமையானவர் என்பதால் அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார் .

இந்த நிலையில் அருகில் இருக்கும் பெண்மணி ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். அவரது மகளும், கணவனும் கற்பிட்டியில் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது 4 பிள்ளைகளும், பேத்தியாரின் பராமரிப்பில் வளர்கின்றனர். அந்த பிள்ளைகளுக்கு சந்தேகநபர் அடிக்கடி இனிப்பு வகைகளை வழங்குவது வழக்கம்.

நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு அண்மையாக, 9 வயது சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாக குறிப்பிட்டு, கடைக்கு அழைத்து சென்றுள்ளார்.

சிறுமியை அந்த நபர் கடைக்கு அழைத்து சென்றதை, பிரதேசவாசிகள் சிலர் கண்டுள்ளனர்.

இரவு 7.30 அளவில் சிறுமியை காணவில்லையென பேத்தியார் தேட ஆரம்பித்தார். சிறுது நேரத்தில் அயலவர்களும் இணைந்து தேடினர். தகவல் பரவி, தலைமன்னார் கிராம மக்கள் ஒன்றிணைந்து பெருமெடுப்பில் தேடுதலில் ஈடுபட்டனர்.

தென்னந்தோட்ட காவலாளி சிறுமியை அழைத்து சென்ற தகவல் பரவியதையடுத்து, பிரதேச இளைஞர்கள்தென்னந்தோட்டத்துக்கு சென்று காவலாளியிடம் விசாரணை செய்தனர்.

தான் சிறுமியை அழைத்து செல்லவில்லையென அவர் தொடர்ந்து கூறினார்.

இதனால் அவரை விட்டு விட்டு சிறுமியை தேடுவதில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

எனினும், காவலாளியின் அசாதாரண நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீட்டு கதவுகளை பூட்டி விட்டு உள்ளே பதுங்கியிருந்து விட்டார்.

இதையடுத்து தென்னந்தோட்டத்துக்குள் புகுந்த கிராம மக்கள் வீட்டை சுற்றிவளைத்தனர். வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து, காவலாளியை பிடித்து வந்து, தர்மஅடி கொடுத்து விசாரணை செய்தனர்.

எனினும், சிறுமியை அழைத்து செல்லவில்லையென காவலாளி தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்.

பொலிசாரும் சம்பவ இடத்துக்கு வந்து, காவலாளியை தமது பொறுப்பில் எடுத்தனர்.

அதிகாலை 3.30 மணியளவில், தென்னந்தோப்புக்கு வேலியோரமாக- அடுத்த காணிக்குள் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேடியதையறிந்ததும், சிறுமியின் சடலத்தை காவலாளி அயல் காணிக்குள் வீசியுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. முள்வேலியில் சிக்கி சிறுமியின் ஆடைகள் கிழிந்திருந்தன.

சிறுமியின் சடலத்தில் மேலாடைகள் மட்டும் அலங்கோலமாக காணப்பட்டது. பிறப்புறுப்பு பகுதிகளில் குருதிப்பெருக்கு காணப்பட்டது.

கைதான நபர் போலி அடையாளத்துடனேயே அங்கு இதுவரை வசித்துள்ளார். அவர் தன்னை தமிழராகவே அடையாளப்படுத்தி வந்த போதும், அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அடையாள அட்டை இலக்கத்தை பரிசோதித்த போதே, அவர் முஸ்லிம் என்பது தெரிய வந்தது. அவர் அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்ததும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

.பின்னர் அப்பகுதியில் உள்ள CCTV காணொளியை பார்வையிட்ட போது குறித்த சிறுமியின் பின்னால் குறித்த நபர் செல்வது தெரியவந்தது.

-இந்த நிலையில் குறித்த நபரை பிடித்து விசாரணைகளுக்கு உட்படுத்தி இரவு முழுவதும் தேடிய நிலையில் இன்றைய தினம் (16) அதிகாலை சிறுமியின் உடல் குறித்து தனியார் தென்னந் தோட்டத்தில் பின் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபர் தலைமன்னாரில் தனது பெயரை விஜேயந்திரன் என அறிமுகப்படுத்தி வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது.

குறிப்பிட்ட நபர் போதைக்கு அடிமையானவர் என்பதால், அவரை கிராமத்திலிருந்து வெளியேற்றுமாறு பிரதேசவாசிகள், தென்னந்தோட்ட உரிமையாளரிடம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

May be an image of 6 people, tree and textMay be an image of 5 people and treeMay be an image of 5 people and treeMay be an image of 10 people, grass and treeMay be an image of 6 people, tree and text