புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர்களின் காம வீக்னஸ்!!லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய கொழும்பு அனித்தா!! வீடியோ
கொழும்பில் வத்தளை, வெள்ளவத்தை, தெஹிவளை போன்ற பகுதிகளில் அடிக்கடி இடத்தை மாற்றி அனித்தா என்ற பெயருடன் வசித்து வரும் இந்தப் பெண் லண்டன், சுவிஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் பாலியல் பலவீனம் கொண்ட தமிழ்க் குடும்பஸ்தர்களிடம் பலலட்சம் ரூபாக்களை சுருட்டியுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் கொழும்பு பகுதியில் வசிக்கும் மலையக இளைஞர்கள் மற்றும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களில் வசிக்கும் இளைஞர்களை வெளிிநாட்டுக்கு அனுப்புவதாகவும் கூறி பணம் பெற்று தலைமறைவாகத் திரிவதாகவும் பொலிஸாரிம் முறையிடப்பட்டுள்ளது.
இந்தப் பெண் தன்னை வவுனியாவை சொந்த இடமாகக் கொண்டவள் என்றும் சிலருக்கு தான் யாழ்ப்பாணம் என்றும் தெரிவித்து வந்துள்ளாள். 4 போலிப் பெயர்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து பேஸ்புக் கணக்கு வைத்திருந்துள்ளாள்.அவற்றிலிருந்தே புலம்பெயர் தமிழ்க்குடும்பஸ்தர்களை வலையில் வீழ்ந்த்தி பணம் கறந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவளைச் சந்திப்பதற்காக சில புலம்பெயர் பாலியல் பலவீனமுள்ள தமிழ் குடும்பஸ்தர்கள் கொழும்பு வந்து சென்றுள்ளார்கள். அவர்களுடன் ஒன்றாக இருந்து அந்த புகைப்படங்களை வைத்து குறித்த குடும்பஸ்தர்களை நுட்பமான முறையில் அச்சுறுத்தி பணம் பெற்றுவந்துள்ளாள்.
லண்டன் பகுதியில் வியாபார நிலையம் நடாத்தும் வவுனியாவைச் சேர்ந்த ஒரு குடும்பஸ்தரிடம் மட்டும் 35லட்சம் ரூபா பணம் பறித்துள்ளாள். குறித்த குடும்பஸ்தர் இவளுடன் ஓரிருநாள் கொழும்பில் தங்கியிருந்துள்ளார். அதன் பின்னர் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கர்ப்பத்திற்கு காரணம் நீங்கள் தான் என தெரிவித்தே பணம் பறிக்கப்பட்டுள்ளது. கடிதம் எழுதி வைத்துவிட்டு தான்ஆதாரங்களை எல்லாம் மேசையில் வைத்துவிட்டு துாக்கில்தொங்கப் போவதாக கூறியே பணம் பறிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் கர்ப்பத்தை கலைத்து விடவே குறித்த பணம் தேவை என கூறி வாங்கியுள்ளாள் .
தனது காதலன் என்றும் தனது கணவன் என்றும் சிலரை குறிப்பிட்டு அவர்களை வைத்தே குறித்த புலம்பெயர்தமிழர்களை அச்சுறுத்தி பணம் பறித்து வந்துள்ளாள். இவளுக்கு வட்சப்பில் நிர்வாண தரிசனம் கொடுத்த பத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் வீடியோக்கள் இவள் மூலமாக தவறான இணையத்தளங்களில் பதிவு செய்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது எமது முகப்புத்தக மெசேஞ்சருக்கோ தகவல்களை தந்துதவவும். இதனால் பலர் காப்பாற்றப்படுவார்கள்.















