யாழ் மீசாலையில் வீட்டை அடித்த உடைத்து கொளுத்திய ரவுடிகள்!! மயிரிழையில் தப்பிய பிள்ளைகள்!! Photos
யாழ்ப்பாணம் தென்மராட்சி – மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத குழுவினர் பொருட்களுக்கு தீயிட்டுள்ளனர்.இதன்போது மோட்டார் சைக்கிள் தொலைக்காட்சி பெட்டி மற்றும் வீட்டு தளபாடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.வீட்டில் தாய் மகள் பேரப்பிள்ளைகள் என ஐவர் இருந்துள்ளனர். தீ பரவியதால் வீட்டிலிருந்தவர்கள் கத்திக் குக்குரல் இட்ட போதுஅயலர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






