பிரான்ஸ் நாட்டிலிருந்து கடல் ஊடாக லண்டன் சென்ற யாழ் இளைஞர் டினேஸ் பலி !
சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து முகவர் ஊடாக கடல் ஊடாக லண்டன் சென்ற போது நேற்று புதன் கிழமை உயிரிழந்துள்ளார்
பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிக புலம் பெயர் அகதிகள் வழியாக லண்டன் சென்று குடியேறிவருகின்றனர்
இந் நிலையில் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த சண்முகராசா டினேஸ் வயது 33 என்ற இளைஞர் லண்டன் செல்லும்நோக்கத்துடன் பயணித்த போது உயிரிழந்துள்ளார்
இவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டவில்லை சடலத்தை பெறுப்பேற்க உறவினர்கள் முயற்சி செய்து வருகின்றனர் குறித்த பயணம் மிகவும் ஆபத்து நிறைந்த பயணம் என்று தெரிவிக்கப்படுகின்றது

