திருகோணமலையில் கஜேந்திரன், காண்டீபன் மீது சிங்களக் காடையர்கள் கடும் தாக்குதல்!! திலீபனின் ஊர்தியும் அடித்துடைப்பு!! (வீடீயோ)
இது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும்……
உலகத்தின் உன்னதமான அகிம்சா வழி தியாகத்தின் உதாரணமான ஒருவனின் திரு உருவத்தை சுமந்து சென்ற இந்த ஊர்தி, திருகோணமலையில் உள்ள கப்பல்த்துறை பகுதியில் சிங்கள இனவாதக் காடையர்களால் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது.
கஜேந்திரன் MP மற்றும் காண்டீபன் உட்பட பலர் மீது மிக மோசமாக தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
அமைதியான முறையில் இடம்பெறும் ஒரு நினைவு தினத்தை குழப்ப இந்த் காடையர்களுக்கு அதிகாரம் உண்டெனில் இந்த நாட்டில் சட்டமும் பொலீஸாரும் எதற்கு?
சிங்கக்கொடிகளை காட்டியபடி தாக்கியிருக்கின்றார்கள் , எமது உரிமைகளுக்கு எதிராகவே இந்தக் கொடி பல காலமாய் பறக்கிறது.