புதினங்களின் சங்கமம்

யாழ் அச்சுவேலியில் இறந்த பெண்ணின் ஆவி உலாவித் திரிந்ததாக பரபரப்பு! வீடியோ

இறந்த பெண்ணின் வீட்டில் ஒவ்வொரு நாளும் மர்ம சத்தங்கள் கேட்பதும் வீட்டிற்குள் மண்ணை அள்ளித் தூவுவதும் ஜன்னல் கதவுகளை அடிப்பதும், புகை போன்ற உருவம் சத்தத்துடன் வருவதும் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. குறித்த வீட்டில் இருப்பவரின் மாமியார் பஞ்சமியில் இறந்ததாகவும் அதனால் பேயாக மாமியார் உலாவுவதாகவும் மல்லிகைப்பூ வாசம் சலங்கை ஒலி கேட்பதாகவும் வீட்டுக்காரர் கூறியுள்ளார். அத்துடன் அதனை வீட்டின் உரிமையாளர் தனது தொலைபேசியில் நடுநிசி 1.00 மணியளவில் காணொளி எடுத்துள்ளார். எடுக்கப்பட்ட காணொளியில் உருவம் ஒன்று நாற்காலியை பல்வேறு கோணங்களில் சுழற்சியும் ஆட வைத்தும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதே வேளை இது திட்டமிட்டு செய்யப்பட்ட வீடியோ என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. பேய் என்ற ஒன்று உலகத்திலேயே இல்லை என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான மடைத்தனமான செயற்பாடுகள் தற்போதும் தொடர்ந்தவண்ணம் இருப்பதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

பேயின் நடமாட்டத்துடனான பரபரப்பு வீடியோவிற்கு இங்கே அழுத்துங்கள்….

https://www.youtube.com/@vampannews