புதினங்களின் சங்கமம்

யாழில் சிறுமியுடன் உறவு கொண்ட பின் அவளைப் பிடிக்கவில்லை என பொலிஸ் நிலையம் சென்ற 21 வயது இளைஞனும் அவனது பெற்றோரும் சிறையில் அடைப்பு!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுற்குட்பட்ட பகுதியில் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 21 வயதான இளைஞனும், அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர். 17 வயதான சிறுமியும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றரை வருடங்களின் முன்னர் சிறுமிக்கும், இளைஞனுக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் இளைஞனின் வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர்.

எனினும், அண்மையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரின் குடும்பத்தினருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. இதன் பின்னர் இந்த இளம் ஜோடி தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

சிறுமியின் உறவை தொடர விரும்பவில்லையென்றும், சிறுமியின் குடும்பத்தினர் தொல்லை தருகின்றார்கள் என்றும் இளைஞனும், குடும்பத்தினரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றுள்ளனர்.

விடயத்தை கேட்டறிந்த பொலிசார் அவர்களின் முறைப்பாட்டை பெற்றுக் கொள்ளாமல் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் அவர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர்.

சிறுமியும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதான 21 வயதான இளைஞன், தாய், தந்தை ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்