யாழில் அரச பஸ்சினுள் ஏறி சாரதி, நடத்துனர் மீது கொடூர தாக்குதல்!! பரபரப்பு வீடியோ இதோ!!
யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்திற்குள் ஏறிய கும்பல் ஒன்று சாரதி, நடத்துனர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரைநகர் சாலைக்கு சொந்தமான பேருந்து, கொழும்பு சேவைக்கு புறப்பட்ட போது இந்த சம்பவம் இன்று (24) மாலை நடந்தது.
காரைநகர் கடற்கரை வீதியில் பேருந்தை வழிமறித்த 7 பேர் வரையான கும்பல், பேருந்துக்குள் ஏறி, நடத்துனர், சாரதி மீது கடுமையான தாக்குதல் நடத்தியது.