புதினங்களின் சங்கமம்

யாழில் பயங்கரம்: மெக்கானிக் அடித்துக் கொலை!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திரேசா வீதி பகுதியில், நேற்றிரவு 9 மணியளவில் இந்த கொலை சம்பவம் நடந்தது.

இனம் தெரியாத சிலர் இரும்பு கம்பி, வாள்களால் நடத்திய தாக்குதலில், ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.

அதே பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ர.அஜித் (30) என்பவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மெக்கானிக் தொழில் புரிகிறார்.

தாக்குதலாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.No photo description available.