புதினங்களின் சங்கமம்

வளர்ப்பு நாயுடன் உறவு கொண்ட ரணிலின் ஆலோசகர்!! வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் ஹருனிகா!! (வீடியோ)

ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவு கொண்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் நேற்று அந்த பதவியை இராஜினாமா செய்தார்.

ஆஷு மாரசிங்கவுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து, அவரால் கைவிடப்பட்ட பெண் மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.

ஆஷு மாரசிங்கவுடன் இரண்டரை வருடங்களின் முன் பேஸ்புக்கில் அறிமுகமாகி, ஒரே வீட்டில் லிவிங் டு கெதராக வாழ்ந்ததாக அந்த பெண் தெரிவித்தார்.

ஆஷு மாரசிங்கவினால் தான் நிர்க்கதியாகியுள்ளதாகவும், தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தனது சிறிய வளர்ப்பு நாயின் நடத்தையில் வித்தியாசம் தெரிந்ததையடுத்து, படுக்கையறையில் கையடக்க தொலைபேசியை வைத்து கண்காணித்த போது, அவர் வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவு கொண்டது அம்பலமானதாக தெரிவித்தார்.

இது போன்ற பிரச்சனைகளால் கடந்த நவம்பரில் அவரை விட்டு பிரிந்ததாக தெரிவித்தார்.

இந்த பிரச்சினைகள் பற்றி பேச ஜனாதிபதியின் மனைவி, ஜனாதிபதி செயலாளர் ஆகியோரிடம் கேட்டதாகவும், அது முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.

ஆஷு மாரசிங்க நாயை புணரும் புகைப்படங்களையும் ஹிருணிகா ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்தார்.