புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ் மாப்பிளையுடன் சம்மந்தக் கலப்பு!! யாழில் யுவதியின் கட்டிலுக்கு அடியிலிருந்து பிடிபட்ட சமுர்த்தி அலுவலர்!!

சுவிஸில் வசிக்கும் 32 வயதான இளைஞனுடன் எதிர்வரும் தை மாதம் திருமணம் முடிக்க ஆயத்தமாக இருந்த 30 வயதான யுவதியின் வீட்டுக் கட்டிலுக்கு அடியிலிருந்து சமுர்த்தி அலுவலர் ஒருவர் பிடிபட்டு ஆடைகள் அற்ற நிலையில் கடுமையாக தாக்கப்பட்டு காயங்களுடன் மனைவியின் உறவினர்கள் மற்றும் அயலவர்களால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சமுர்த்தி அலுவலர் திருமணம் முடித்து வலிகாமம் பகுதியில் உள்ள மனைவியின் சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். குறித்த வீட்டுக்கு அருகில் தாய் தந்தையற்ற நிலையில் சகோதரி குடும்பத்துடன் யுவதியும் வசித்து வந்துள்ளார். இந் நிலையில் யுவதிக்கும் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தருக்கும் இடையில் கள்ளக்காதல் உருவாகியுள்ளது. அரச உத்தியோகத்தர்களான யுவதியின் சகோதரி மற்றும் கணவன் அவர்களின் பிள்ளைகள் இல்லாத நிலையில் பகல் வேளைகளில் தனியே வீட்டில் இருக்கும் யுவதியுடன் சமுர்த்தி அலுவலர் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவதானித்து வந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சமுர்த்தி உத்தியோகத்தர் யுவதியின் வீட்டுக்கு சென்ற போது அப்பகுதி இளைஞர்கள் யுவதியின் சகோதரியின் கணவனுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள். சகோதரியின் கணவர் அங்கு வந்து சேர்ந்தவுடன் அவருடன் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களும் வீட்டுக்குள் புகுந்துள்ளார்கள். வீட்டு கதவை திறக்க சொல்லியும் யுவதி கதவைத் திறக்காது இருந்ததால் வீட்டுக் கூரை வழியாக இறங்கிய இளைஞர்களால் சமுர்த்தி அலுவலர் யுவதியின் அறைக்குள் இருந்த கட்டிலுக்கு அடியிலிருந்து சமுர்த்தி அலுவலரை பிடித்துள்ளார்கள். அதன் பின்னர் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக சமுர்த்தி அலுவலர் காயங்களுக்கு உள்ளாகி நிர்வாண நிலையில் வீட்டுக்கு வெளியே இழுத்து வரப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இதன் பின்னர் அயலவர்கள் மற்றும் சமுர்த்தி அலுவலரின் மனைவியின் உறவுகள் அவரை காயங்களுடன் மீட்டு ஆடைகளை அணிவித்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

குறித்த யுவதிக்கு சகோதரியின் கணவனின் உறவுக்காரரான சுவிசில் வசிக்கும் 32 வயதான இளைஞனுக்கு எதிர்வரும் தை மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.