புதினங்களின் சங்கமம்

யாழில் குடும்பச் சண்டை!! மனைவியின் சகோதரனின் கன்றை அடித்துக் கொன்ற கணவன் தரப்பினர்!!

குடும்பத் தகராறு காரணமாக மாட்டுக் கன்றினை அடித்துக் கொலை செய்துள்ளார்கள்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக 3 மாதங்கள் நிரம்பிய மாட்டுக் கன்றினை அடித்துக் கொலை செய் த கொடூரம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

நேற்றையதினம் கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மனைவியின் சகோதரன் இந்த வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளார்.

இதன் காரணமாக கணவரின் தரப்பினர், பிரச்சினையில் தலையிட்ட மனைவியின் சகோதரனின் வீட்டுக்கு சென்று அங்கு நின்ற 3 மாதங்கள் நிரம்பிய மாட்டுக் கன்றினை அடித்துக் கொலை செய்து விட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.