புதினங்களின் சங்கமம்

யாழில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட ஆசிரியை செல்வராணி!! துர்நாற்றம் வீசிய நிலையில் சடலம்! வல்லுறவா?

யாழ். உரும்பிராயில் தனிமையில் வாழ்ந்த ஓய்வுநிலை ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலை ஓய்வுநிலை ஆசிரியரான எஸ்.செல்வராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

ஆசிரியையின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் வீட்டினுள் சென்று பார்த்தபோதே குறித்த ஆசிரியை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதோடு அவரது கழுத்து வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் , திருட்டு நோக்கத்திற்காக ஆசிரியை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதே நேரம் ஆசிரியை வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாகவும் சந்தேகம் எழுந்துள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.