புதினங்களின் சங்கமம்

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் ஐஸ் போதைப் பொருளுடன் 24 வயதான பெண் கைது!!

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டு வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் 24 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பேசாளையில் உள்ள வீடு முற்றுகையிடப்பட்டது.

குறித்த வீட்டின் அலுமாரியில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான ஒரு கிலோ 240 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது கைப்பற்றப்பட்ட ஐஸ்போதைப்பொருள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்

குறித்த வீட்டிலிருந்து 24 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை பேசாலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக

பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.