புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் நேற்று பிறந்தநாள் கொண்டாடியவர் இன்று விபத்தால் பரிதாப மரணம்!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்தார்.

இன்று இரவு குறித்த பகுதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், ஊடக நிறுவனமொன்றின் கப் ரக வாகனமும் மோதியதில் விபத்து இடம்பெற்றது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரேயே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த ரயீவன் (வயது 35) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே சாவடைந்தார். அவர் நேற்றயதினம் தனது பிறந்த நாளினை கொண்டாயிருந்தார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

May be an image of 1 person and text that says "தூங்குபோல் சாக்காடு மலர்வு உதிர்வு 30.12.1985 01.01.2022 கிளிநொச்சி இராமநாதபுரத்தை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவவும் கெண்ட அமரர் செல்வராசா றஜீவன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். துயரில் பங்குகொள்ளும் V.V.S நண்பர்கள் வவுனியா YOGA"