புதினங்களின் சங்கமம்

போலி ஆவணங்களை கொடுத்து 57 லட்சத்துக்கு யாழ்ப்பாண ஏமாளியிடம் வாகனம் விற்ற கில்லாடி!!

வாகனங்களை வாடகைக்கு எடுத்து போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மாத்தளையில் வைத்து கைது செய்துள்ளனர்.

46 வயதான சந்தேக நபர் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி , போலி ஆவணங்களை தயாரித்து நல்லூர் வாசியொருவருக்கு 5.7 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்து ஏமாற்றியதாக யாழ்ப்பாணம் பொலிசாரிடம் முறையிடப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.