புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி கேசவன் கொரோனாத் தொற்றினால் மரணம்!

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலமானார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கல்வியங்காட்டைச் சேர்ந்த அவர் நீதிமன்ற பதில் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.