யாழில் மாவீரர் வாரத்தில் ஒன்று கூடிய அரச ஆதரவாளர்களான தமிழ்த் திருநங்கைகளும் ஓரினச்சேர்க்கையாளர்களும்….. (Photos)
யாழ்ப்பாணத்தில், அரசாங்கத்துக்கு ஆதவான யாழ்ப்பாணம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் செயற்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் சேர்ந்து ‘யாழ்ப்பாண குயிர் திருவிழா‘ என்ற பெயரைச் சூட்டி மாவீரர் வாரத்தில் ஒன்று கூடி மகிழ்ந்துள்ளார்கள். தாம் ஒன்று கூடி யாழ்ப்பாணத்தில் குயிர் திருவிழா நடாத்தப் போகின்றோம் என சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை விட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தாம் எந்த இடத்தில் ஒன்று கூடவுள்ளோம் என்பதை மட்டும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இந் நிலையில் இவர்கள் கண்டி வீதியில் உள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தமக்கிடையே ஒன்று கூடி மகிழ்ந்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள். மாவீரர் தின காலத்தில் இந் நிகழ்வு அரசாங்கத்தின் ஆதரவுடன் நடந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.