கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் !
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பரந்தன் சிவபுரம் பகுதியில் பாழடைந்த தற்காலிக கொட்டகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆணின் சடலமானது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளதுடன் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.