புதினங்களின் சங்கமம்

சஹ்ரான் உயிருடன்! பெங்களுரு – காஷ்மீர் வழியாக சென்றார்! உறுதிப்படுத்தினார் ராணுவத் தளபதி!!(Video)

250க்கும் அதிகமான அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குத் தலைமைதாங்கிய ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் மௌலவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும் என்று ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்வை வைத்திருக்கும் எந்த நபர்களும் குறிப்பாக ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் தமது நாட்டிற்குள் நுழையவில்லை என்பதை இந்திய அரசாங்கம் தெரிவித்திருக்கும் நிலையிலேயே ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி இதனை திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

சஹ்ரான் மௌலவி என்பவர் உயிரிழக்கவில்லை என்றும் அவர் கடல்மார்க்கமாக தமிழ்நாடு ஊடாக இந்தியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார் என்பது விசாரணை ஊடாக தெரியவந்திருப்பதாக இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியின் இந்தக் கருத்தை முற்றாக நிராகரித்திருக்கும் இந்திய அரசாங்கம், ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்த தீவிரவாதிகளும் தமது நாட்டிற்குள் நுழையவில்லை என்று திட்டவட்டமாக நேற்றைய தினம் தெரிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் யுத்தவெற்றியின் தசாப்தக் கொண்டாட்டம் தொடர்பாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பபில் இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார்.

தமிழாக்கம்: “எனது சார்பில் நான் உண்மை நிலைவரத்தை தெளிவுபடுத்துகிறேன். ஒரு செயற்பாடாக நாம் இதனை செய்துவருகிறோம். அப்போது சில தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. அதேபோல கைதுகளும் இடம்பெறுகையில், அவர்களிடம் நடத்தும் விசாரணைகளில் பலதகவல்கள் பெறப்படுகின்றன. அவ்வாறு உறுதிசெய்யப்பட்ட தகவலைத்தான் நான் கூறியிருந்தேன். சஹ்ரான் மௌலவி தெளிவாக இந்தியாவுக்கு சென்றார் என்பதை நான் கூறியிருந்தேன். அவர் தொடர்பில்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். இந்தியா சென்ற இடம் என்பதுகுறித்து கேட்டபோது இந்தியா – பெங்களுரு மற்றும் காஷ்மீர் என்று குறிப்பிட்டேன். நான் இந்த கருத்திலேயே இன்றும் இருக்கின்றேன். அதனை இந்தியா நிராகரித்திருப்பது அவர்களுடைய விவகாரமாகும். நான் தெரிந்துகொண்ட விடயத்தை கூறுவது எனது தரப்பு விவகாரமாகும்”