புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சி வல்லைப் பகுதியில் காரில் வந்த கொள்ளையர் குழு பயங்கரம்!! வீதியில் சென்றவர்களிடம் ஒரே நேரத்தில் 3 கொள்ளைகள்

வடமராட்சியின் வல்லை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் கொள்ளைக் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் காரில் வந்த மூவர் கொண்ட குமபல் ஒன்று மூவரை அச்சுறுத்தி பணத்தை அபரித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்த முறைப்பாடுகளை அடுத்து இந்தக் கும்பலை பொலிஸார் தேடிவருகின்றனா்.

வெள்ளை நிற கார் ஒன்றினில் பயணித்த மூவர் கொண்ட இக்கும்பல் வல்லைப்பகுதியில் வீதியில் பயணித்த முதியவர் ஒருவரை வழிமறித்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டமை தொடர்பான அட்டையினை கோரியுள்ளனர்.இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவரிடமிருந்த பணத்தை பறித்து தப்பித்துள்ளது.

அதே போன்று உயவு இயந்திரத்தில் கல் ஏற்றிவந்திருந்த ஒருவரை வல்வெட்டித்துறையில் வழிமறித்து பெமிட் கோரிய கும்பல் அவரிடமிருந்தும் பணத்தை பறித்து சென்றுள்ளது.

ஒரே நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடந்த துணிகர பணப்பறிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

குறித்த காரிலிருந்த ஒருவர் அங்வீனமுற்றவர்களின் பயன்பாட்டிலுள்ள கைத்தடியை வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.