இலங்கையில் உள்ள குடிகாரர்களின் கவனத்துக்கு!! 4 நாட்களுக்கு சாராயம் கிடையாது!!
நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளை மே 17ஆம் திகதி தொடக்கம் 4 நாள்களுக்கு
மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி நாளைமறுதினம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் வரும் 20ஆம் திகதி
திங்கட்கிழமை வரை 4 நாள்களுக்கு நாடுமுழுவதுமுள்ள மதுபான சாலைகளை மூடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டே இந்த அறிவிப்பை விடுத்துள்ள மதுவரித் திணைக்களம், கட்டளையை
மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.