புதினங்களின் சங்கமம்

யாழில் வைரமுத்து வசந்தராசாவுக்கு எமனான நாய்! – சிகிச்சை பெறாததால் சோகம்!!

வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்.அச்சுவேலி தோப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்த்தருக்கு,

கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரை கண்டால் பயம் போன்ற நிலை உருவானதால்

அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை அவர் உயிரிழந்துள்ளார். நாய் கடித்த நிலையில் உரிய தடுப்பூசியை பெறாமையால் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளதாக

மரண விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை அவரை கடித்த வளர்ப்பு நாள் கடித்த மறுநாளே உயிரிழந்துள்ளது.