கைது செய்யப்பட்ட 53 வயதான இலங்கைத் தமிழர், குறைந்தது 3 முறையாவது ஆட்டை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
டூர்ஸில் உள்ள ஹொனாரே-டி-பால்சாக் பூங்காவில் வளர்ப்பு ஆடுகளை துஷ்பிரயோகம் செய்தமைக்காக 27ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அவர் ஆடுகளை வன்புனர்ந்தது உறுதியாகியுள்ளது. எனினும், 2018ஆம் ஆண்டிலிருந்து ஹோனோரே-டி-பால்சாக் பூங்காவில் அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
ஒரே ஆட்டை 3 முறை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
முதல் முறையாக ஜனவரி 12 முதல் 13 , பின்னர் மார்ச் 21 முதல் 22 வரை மற்றும் இறுதியாக ஜூன் 29 முதல் 30 வரை இரவுகளில் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டடுள்ள அவர், தியானம் அல்லது யோகா செய்வதற்காக சில நேரங்களில் பூங்காவிற்கு வருவதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால், ஆட்டை பாலியல் பலாத்காரம் செய்தது நினைவு இல்லை என தெரிவித்துள்ளார்.
அவர் டிசம்பர் 23, 2021 அன்று டூர்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்வார்.