புதினங்களின் சங்கமம்

வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வலையில் சிக்கிய கோமராசி மீன் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது!! (Photos)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில், நேற்று மாலை, வலையில் சிக்கிய கோமராசி மீன், மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது.

 

கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில், சுமார் 8 அடி நீளமான மீனை, இயந்திரம் மூலம், மீனவர்கள், கரைக்கு கட்டியிழுத்தனர்.

கோமராசி அல்லது புள்ளிச்சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை, வலையில் இருந்து அகற்றிய மீனவர்கள், அதனை, மீண்டும் கடலுக்கு அனுப்பியுள்ளனர்.

வலைகளுக்கு நடுவே, அதிகளவான மீன்கள் வந்த போதிலும், கோமராசி மீனின் வருகையால், மீன்கள் எதுவும் பிடிபடவில்லை. சில நாட்களுக்கு முன்பு, மேலும் ஒரு கோமராசி மீன், குறித்த சம்மாட்டியின் வலையில் அகப்பட்டதுடன், நேற்று இரண்டாவது முறையாகவும், கோமராசி மீன் பிடிபட்டுள்ளது. இந்த நிலையில், ஆழ்கடலில் வசிக்கும் இந்த மீன்கள், சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக, மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.