பருத்தித்துறையில் ஒரு வயதுக் குழந்தை கொரோனாவால் மரணம்!
யாழ்ப்பாணம் வடமராட்சியின் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளது.
மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 03 மாதமும் நிரம்பிய பெண் குழந்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
அதன் பிபிஆர் பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தைக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.