புதினங்களின் சங்கமம்

யாழ் கொடிகாமத்தில் இன்று இரவு அதி வேகமாகச் சென்ற 24 வயதான நாவர்ணன் பலி! (Photos)

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியபோதே விபத்து நிகழ்ந்துள்ளது.

படுகாயம் அடைந்த இளைஞர் சாவகச்சேரி ஆதார வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொடிகாமம், கோயிலாமனைப் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரன் நாவர்ணன் (வயது 24) என்பவரே உயிரிழந்தவராவார்.