புதினங்களின் சங்கமம்

ஆவா குழுவின் தலைவன் வினோத்துடன் மேலும் இரு காவாலிகள் கைது!

ஆவா குழுவின் தலைவரான “ஆவா” என்று அழைக்கப்படும் வினோத் என்பவரும் அவருடன் தொடர்புடைய கௌசி மற்றும் நிசாந்தன் ஆகியோர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதனார்மடத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் அவர்களுக்கு சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் சுன்னாகம் பொலிஸாரிடம் கையளி்க்கப்பட்டுள்ளனர்.