யாழ்ப்பாணத்தில் இன்று மூன்று பேர் கொரோனாவால் மரணம்!
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த 44 வயதுடைய நபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
துரைராஜா நந்தபாலன் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரின் பிசிஆர் மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் போது அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று அதிகாலையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்த அதேவேளை, அச்சுவேலியிலும் 80 வயதுடைய முதியவர் ஒருவர் தன்னுடைய வீட்டில் உயிரிழந்திருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று மட்டும் யாழ்ப்பாணத்தில் மூன்று பேரின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.