Vampan memesபுதினங்களின் சங்கமம்

அடங்காத ஆசையில் கந்தனைத் தேடி வந்த யாழ்ப்பாண அன்ரி!! (Video)

எனக்கு கொரோனா வந்து செத்தாலும் பறவாயில்லை…. கந்தனைப் பார்க்ாமல் விடமாட்டேன் என அடங்காத பக்தியில் யாழ்ப்பாண பெண்மணி….

இந்த வீடியோவைப் பார்த்த பின் எம்மை நினைத்து கோபப்பட்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல…. ஏனெனில் எமது இணையத்தளத்தின் பெயரே அப்படித்தான்…..

இந்த அன்ரி சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது என பேஸ்புக்கில் வெளிவந்த பதிவுகளில் ஒன்றையும் கீழே தந்துள்ளோம்….

இந்த அக்கா சொல்வதில் என்ன பிழையிருக்கு?
சிங்கள பேரினவாதத்திற்கு எங்களில் அக்கறையா?
இந்த அக்கா கோயிலுக்குள்ள போனால் கொரோனா வரும் என்று நினைக்கிற முட்டாள்தனமான கதைகளை பகிர வேண்டாம்.
யாழ்ப்பாணம் முழுக்க கொரோனாவை பரப்பி போட்டு வீட்டில் இருந்து வந்த அந்த மனிசியை கலாய்க்கிற உங்களுக்கு அறிவு அவ்வளவு தானா?
இந்த வீடியோவ பகிர்ந்து இந்த அக்கா தான் யாழ்ப்பாணத்திற்கு கொரோனாவ பரப்ப போறார் என பதிவிடும் அறிவாளிகளே உங்களிடம் ஒரு சவால்.
நீங்கள் இப்ப ஒழுங்காகவா வீட்டுக்குள்ள இருக்கிறியல்?
அவரின் சமய நம்பிக்கைக்கு தடைபோட நீங்கள் யார்?
இப்ப யாழ்ப்பாணத்தில் யாருக்கு கொரோனா இல்லை என்கின்றீர்கள்?
றோட்டுக்கு வந்து பாருங்கள் யாழ்ப்பாணத்தில் மாஸ்கூட இல்லாமல் எத்தனை மோட்டு கூட்டம் சுத்துகின்றது என. யாழ்ப்பாண வீதிகள், கடைகள் எல்லாம் இப்ப வெறிச்சோடியா கிடக்கிறது?
அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்.
கருத்து கந்தசாமிகளே!
அவாவுக்கு தன்னை பாதுகாக்க முடியும்.
முடிந்தால் உங்களை பாதுகாக்கிற வேலையை நீங்கள் பாருங்கோ.
வீட்டில் இருக்காமல் ஊருராய் அலைந்து கொண்டு அந்த அக்கா கொரோனா பரப்புகிறார் என எழுத உங்களுக்கு வெட்கமில்லையா?