புதினங்களின் சங்கமம்

மனைவியை விட்டு பிரிய மனமில்லையாம்!! வவுனியா வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயுடன் ஓடித்தப்பிய கணவன்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 33 வயதுடைய கோவிட்
தொற்றாளர் இன்று (11) மதியம் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வசித்து வந்த நிலையில் குறித்த நபர் கோவிட்
தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து, வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை
விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக காணப்படுகின்றார்.

இந்நிலையிலேயே குறித்த கோவிட் தொற்றாளர் மதியம் மனைவியைப் பார்ப்பதற்காக அவரது
வீட்டிற்கு தப்பியோடியுள்ளார். அதன் பின்னர் மனைவி அவரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து
வந்து ஒப்படைத்துள்ளார்.

மனைவியை விட்டு பிரிந்து வாழ முடியாத நிலையில் அவர் வைத்தியசாலையிலிருந்து
தப்பியோடியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.