புதினங்களின் சங்கமம்

ஊரங்கு தொடர்பாக 3 வெவ்வேறு அறிவிப்புகளால் குழம்பிக்கொள்ள வேண்டாம்!! இதோ முழு விபரம்!!

இன்று (12) இரவு 11 மணிமுதல் நாளை (13) அதிகாலை 4 மணிவரையில் நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. (அது அத்தியாவசிய சேவைகளுக்கு பொருந்தாது)

2 – 13ஆம் திகதி இரவு 11மணிமுதல் 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில், வீட்டை விட்டு வெளியேற முடியாத வண்ணம் பயணத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. (அத்தியாவசிய சேவை, தேவைகளுக்கும், கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள செல்​வோருக்கும் அந்த தடை பொருந்தாது.)

3 – எதிர்வரும் 31ம் திகதி வரை அத்தியாவசிய தேவைகளற்றோர் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் இறுதி இலக்கத்தை அடிப்​படையாகக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறலாம்.

அ​வற்றின் இறுதி இலக்கமாக 1,3,5,7,9 ஆகியன இருந்தால், ஒற்றை எண்களைக் கொண்ட நாள்களில் வீட்டை விட்டு வெளியேறலாம்.

0,2,4,6,8 ஆகிய இலக்கங்கள் இருந்தால், இரட்டை எண்களைக் கொண்ட நாள்களில் வீடுகளிலிருந்து வெளியேறலாம்.

இது, பயணங்கள் முழுமையாக தடைவிதிக்கப்பட்டிருக்கும் 13 -17 திகதிகளுக்கு முழுமையாக பொருந்தாது.