புதினங்களின் சங்கமம்

ஓயாத அலையாக தாக்கும் கொரோனா: சற்று முன்னதாக மேலும் ஆயிரத்து 429 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா தொற்று ஓயாத அலையாக தாக்கி வரும் நிலையில் சற்று முன்னதாக மேலும் ஆயிரத்து 429 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று (மே-12) மேலும் ஆயிரத்து 429 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தொற்று நோயியல் பிரிவு சற்று முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 527 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.