புதினங்களின் சங்கமம்

யாழ்.மாநகர மேயர் கைதுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்!

யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டித்துள்ளது.

அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அரசின் பாசிச ஆட்சியை நோக்கிய நகர்வுகள் உச்சத்தை எட்டியுள்ளன. இன மற்றும் அரசியல் ரீதியான பாதுகாப்பின்மை மோசமாகியுள்ளது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.