புதினங்களின் சங்கமம்

யாழ்.திருநெல்வேலிச் சந்தைத் தொகுதியில் 24 பேருக்கு கொரோனா! இழுத்து மூடல்?

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் இன்று எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தைத் தொகுதியில் காணப்படும் மரக்கறி வியாபாரிகள், விற்பனை நிலையங்களில் பணியாற்றுவோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி சந்தை முடக்கம்!
அவர்களில் யாழ்.மாவட்டத்தில் 33 பேர், முல்லைத்தீவில் ஐந்து பேர், கிளிநொச்சியில் நான்கு பேர், வவுனியாவில் இருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் 24 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலிச் சந்தைத் தொகுதி தற்காலிகமாக முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் சற்று முன்னர் தெரிவித்தார்.

இன்று திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 24 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்தே திருநெல்வேலிச் சந்தை மூடத்தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.