புதினங்களின் சங்கமம்

ஜெனீவா; இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றிபெற்றது!

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள வெற்றி பெற்றது.

தீா்மானத்துக்கு ஆதரவான 22 நாடுகள் வாக்களித்தன. 11 நாடுகள் எதிரான வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சீனா , ரஷ்யா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சோமாலியா, பங்களாதேஸ், கியூபா, பொலிவியா, எரித்திரியா, உஸ்பெகிஸ்தான், வெனிசுலா ஆகிய 11 நாடுகள் வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.

இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவை தீா்மானத்தை ஆதரித்தன.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்

01- ஆர்ஜென்ரீனா

02- ஆர்மேனியா

03- ஒஸ்ரியா

04- பஹாமஸ்

05- பிரேசில்

06- பல்கேரியா

07- ஐவரி கோஸ்ற்

08- செக் குடியரசு

09- டென்மார்க்

10- பிஜி

11- பிரான்ஸ்

12- யேர்மன்

13- இத்தாலி

14- மாலாவி

15- கிறீஸ்

16- மெக்ஸிகோ

17- போலன்ட்

18- தென் கொரியா

19- உக்ரெய்ன்

20- பிரித்தானியா

21- உருகுவே

22- நெதர்லாண்ட்