புதினங்களின் சங்கமம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவி!

தமிழகத்தில் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் கடந்த ஜூன் 14-ஆம் திகதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான பொலிசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கொலை செய்யப்பட்டவர் தேனி மாவட்டம் கூடலூர் போயன்மார் தெருவை சேர்ந்த நாகராஜ் (42) என்பதும், செங்கல் காளவாசல்களில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது.

அதன் பின் அவருடைய எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி உறுதி செய்யப்பட்டதால், நாகராஜ் மனைவி முத்துமாரியை பிடித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அவர் காதலனுடன் சேர்ந்து கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், முத்துமாரிக்கும், புதுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் பழக்கும் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது. இருவரும் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளனர். நாகராஜ் செங்கல் காளவாசல் வேலைக்காக அடிக்கடி கோயமுத்தூர் சென்றுவிடுவார். இதனால் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். இது முத்துமாரிக்கு பிடிக்கவில்லை.

இதனால் செல்வராஜுடன் அதிகமாக நெருங்கி வாழ தொடங்கி உள்ளார். முத்துமாரியின் மூத்த மகள் திருமணத்திற்கு செல்வராஜ் உதவி உள்ளார். நாகராஜ் மகள் திருமணத்திற்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது முத்துமாரியின் காதல் விவகாரம் தெரிய வர, மனைவியை கண்டித்துள்ளார். இது முத்துமாரிக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், செல்வராஜுவிடம் இது குறித்து கூறி உள்ளார்.

அதன் பின் இருவரும், நகராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் படி சம்பவ தினத்தன்று,

நாகராஜ் போதையில் இருந்துள்ளார். இதில் அதிகமாக மது ஊற்றி கொடுத்து காதலுடன் சேர்ந்து கணவரை அடித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் முத்துமாரியை கைது செய்தனர். காதலன் செல்வராஜை பொலிசார் தேடி வருகின்றனர்.