புதினங்களின் சங்கமம்

யாழில் அரச ஊழியருக்கு கொரோனா!! விரக்தியில் தாயார் தற்கொலை!!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட அரச உத்தியோகத்தர் ஒருவரின் தாயார் இன்று காலை விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தொற்றுக்குள்ளான மகன் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தாருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்நிலையிலேயே அவர் விபரீத முடிவை எடுத்ததாக தெரியவருகிறது.