புதினங்களின் சங்கமம்

இலங்கையில் ஓரினச்சேர்க்கை: பெண்களை காதலித்து ஏமாற்றும் இளம்பெண்ணால் பரபரப்பு!!

ஹொரவப்பொத்தான பொலிஸ் பிரிவில் உள்ள ஒலுகடவல கிராமத்தில் வசித்த 3 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணும், முந்தல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மஹிந்தலையை சேர்ந்த 26 வயதான திருமணமாகாத யுவதியும் காணாமல் போயிருந்தனர் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு, ஜனவரி 31 ஆம் திகதி. இரவு 11 மணிக்கு பொலிஸ் நிலையங்களிற்கு ஒரு செய்தி பரிமாறப்பட்டது. அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் சி.டபிள்யூ. டி. விக்ரமரத்ன, வட மத்திய மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி.நந்தன முனசிங்கவிடம், காணாமல் போன இரண்டு பெண்கள் குறித்து உடனடியாக விசாரணைகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தினார்.அதன்படி, அனுராதபுர பிரிவுக்கு பொறுப்பான எஸ்.பி. கீர்த்தி லங்கா கீகனேஜின் முழு மேற்பார்வையில், அனுராதபுர பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை ஆய்வாளர் பண்டார விஜகோன் தலைமையிலான பொலிஸ் குழு காணாமல் போன இரண்டு பெண்கள் தொடர்பான விசாரணைகளை தீவிரமாக தொடங்கியது.

பொலிசாரின் விசாரணையில், காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஓரினச்சேர்க்கையாளர் என்ற விடயம் வெளியானது. அவரது அதீத ஓரினச்சேர்க்கை ஆர்வத்தினால் ஏற்கனவே 3 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. அத்துடன், அவரது மொபைல் சிம்மிற்காக சரியான அடையாள அட்டை சமர்க்கப்பட்டிருக்கவில்லையென்பதும் என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்தது, இந்த சம்பவங்கள் இலங்கையையே உலுக்கியுள்ளது எனலாம்.