புதினங்களின் சங்கமம்

பளை புதுக்காட்டுச் சந்திப்பகுதியில் கோர விபத்து! ஒருவர் பலி! (video)

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் புலோப்பளை மேற்கை சேர்ந்த 56வயதுடைய கிருஸ்ணன் நவநீதன் என்பவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது யாழ் நோக்கி வருகை தந்த டிப்பர் புதுகாட்டுச்சந்தியிலுள்ள காபட் நிறுவனத்துக்கு திரும்பிய வேளை மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் காலை 9.15மணியளவில் இடம்பெற்றுளதாக தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Image may contain: motorcycle and outdoor