யாழ் மண்டைதீவில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப மரணம்!! (Video)
மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார்
தெரிவித்தனர்.
இந்தச் சோகச் சம்பவம் இன்று (நவ. 21) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மண்டைதீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5)
ஆகிய இருவருமே மழைநீர் சேகரிக்கும் குன்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.