புதினங்களின் சங்கமம்

சாவகச்சேரி வைத்தியசாலையில் திடீரென நோயாளி உயிழந்ததால் பரபரப்பு! கொரோனா சந்தேகம்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவக்சேரி வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றதாக தெரியவருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

காய்ச்சல் அறிகுறியுடன் காணப்பட்ட வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த ஒருவர் சாதாரண விடுதியில் கடந்த நான்கு நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இன்று அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

அவர் தொடர்பில் விசாரித்தபோது அவருடைய வாகனச் சாரதி கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இதனால் இன்று உயிரிழந்தவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வைத்தியசாலை மட்டத்தில் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

சாதாரண விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளமையால் அவருக்கு தொற்று உறுதியானால் பாரிய ஆபத்து நிலை ஏற்படும் என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.