Home புதினங்களின் சங்கமம் வற்றாப்பளையில் நள்ளிரவில் யன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையன்!!

வற்றாப்பளையில் நள்ளிரவில் யன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையன்!!

முல்லைத்தீவு – வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர் ஒருவர், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் மதிலேறி உள்நுழைந்த நபர், அதிகாலை 2.20 மணி வரை வீட்டினுள் நுழையப் பலமுறை முயற்சித்துள்ளார்.

இதற்கான சான்றுகள் வீட்டிலுள்ள பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.

பின்னர் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்த நபர், சாமியறையில் வைக்கப்பட்டிருந்த 51,000 ரூபா ரொக்கப் பணத்தையும் இரண்டு பவுண் தங்க நகைகளையும் திருடியுள்ளார்.

இதன்போது வீட்டினுள் நபர் ஒருவரின் நடமாட்டத்தை உணர்ந்த வீட்டார்கள் கூச்சலிடவே, திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

சந்தேகநபரை 3 நாட்களுக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்ததாக உறவினர்கள் கூறினர்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments