புதினங்களின் சங்கமம்

யாழ் வைத்தியசாலை முன் கைக்குண்டைக் காட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் திருடுவதற்கு முயன்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், குறித்த நபரை பொலிஸார் சோதனையிட்டபோது அவரிடமிருந்து வெடிக்கக்கூடிய நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொன்னகர் முறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட 22 வயதுடைய இளைஞனே இவ்வாறா கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மோட்டார் சைக்கிள்களைத் திருடுவதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வந்தார் எனவும் திருட்டில் ஈடுபடும்போது கைக்குண்டைக் காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டு வருகிறார் எனவும், ஏற்கனவே யாழ். மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களைத் திருடியுள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அவர் திருடிய மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை யாழ்ப்பாணபொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதவானிடம் முற்படுத்தப்படவுள்ளார்.