புதினங்களின் சங்கமம்

இலங்கையில் இறந்து கரையொதுங்கும் கடலாமைகள்!!

கொழும்பு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் ஆமைகள் உயிரிழந்ததற்கு தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து வெளியான எரிபொருளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளவத்தை மற்றும் கல்கிசை ஆகிய கடற்பகுதிகளில் உயிரிழந்த நிலையில் 12 ஆமைகளின் உடல் கடற்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.