புதினங்களின் சங்கமம்

யாழில் குண்டு தாக்குதலுக்கு தயாரானார்களா?? நையீரிய பிரஜைகள் சுற்றிவளைக்கப்பட்டு கைது !!

யாழ்ப்பாத்தில் நைஜீரியா குடிமக்கள் இருவர் உட்பட ஒன்பது நபர்களை யாழ்ப்பாண பொலிசார்
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

யாழ். நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கி
இருந்தவர்களை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதில் இன்றைய தினம் ஒன்பது பேரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , அவர்களின் ஆவணங்களையும் பரிசோதித்து வருகின்றனர்.

விசாரணைகளின் ஊடாக அவர்களின் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீது சந்தேகம் இல்லை என்பது உறுதியானால் அவர்களை விடுதலை செய்வோம் எனவும் , சந்தேகம் இருப்பின் அவர்களை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என பொலிசார் தெரிவித்தனர்.

அதேவேளை நேற்றைய தினம் யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து
தங்கியுள்ள நபர் மீது சந்தேகம் உள்ளதாக அயலவர்கள் பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து இரவு
அவ்வீட்டை சுற்றி வளைத்த பொலிசார் வீட்டில் தேடுதல் நடத்தியதுடன் , வீட்டில் இருந்தவரையும்
விசராணைக்கு உட்படுத்தி இருந்தனர். இருந்த போதிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில்
எவையும் இல்லை என்பதனை பொலிசார் உறுதிப்படுத்திய பின்னர் அங்கிருந்து பொலிசார் சென்று
இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.