புதினங்களின் சங்கமம்

இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா?? இன்று முடிவு வெளியாகும்!!

 

கம்பஹா – மினுவங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினுவங்கொட பகுதியில் நேற்ற கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவரும் பின்னர் அவரத மகளும் இனங்காணப்பட்டனர். இதையடுத்து திவுலுபிட்டிய மற்றும் மினுவங்கொட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில். இததொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கருத்து வெளியிட்டுள்ளார்.

இன்று மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவல் காணப்படுமாயின் ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.

இதேவேளை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளினூடாக பயணிக்க முடியும் எனினும் அப்பகுதிகளில் வாகனத்தை நிறுத்த முடியாது.’ என்றார்.